இடுகைகள்

டிசம்பர், 2024 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

அம்பேத்கர் - பௌத்தம்

டிசம்பர் மாதம் 10 ஆம் நாள் , காலை 5 மணி 11 நிமிடங்கள் . இந்த ஏரியல் யூனிகோட் கண்ணுக்கு அவ்வளவு இதமாக உள்ளது . நேற்று முதல் நாள் . காலையிலும் மாலையிலும் புத்தரும் அவரது தம்மமும் நூலை வாசித்து விட்டேன் . காலையில் 20 நிமிடங்கள் பெரிய அளவு தடங்கல் இல்லை . இரவு 20 நிமிடங்களின் போது எண்ணங்கள் அலைபாய்ந்து கொண்டே இருந்தன . திரும்பத் திரும்பப் பிடித்துக் கொண்டு வர வேண்டியிருந்தது . இந்த நூலை வாசிப்பதற்கு ஒரு மாதம் வரை பிடிக்கலாம் . அதன் பிறகு மார்க்சின் புனிதக் குடும்பம் என்பதை எடுத்துக் கொள்ள வேண்டும் . God Building என்பது நான் எண்ணிக் கொண்டிருக்கும் அதே வழிமுறையைத்தான் பின்பற்றுகிறது . நாட்டுப்புற ஏழை மக்களுக்கு நூலில் போட்ட திருத்தங்கள் அனைத்தும் சீர்திருத்தவாதத்தை நோக்கியும் குட்டையைக் குழப்பும் விதமாகவுமே இருந்தன . இவற்றை அனுமதிக்க வேண்டியதுதான் . அந்தத் திருத்தங்களைச் சேர்த்து கொண்டு கொடுத்தேன் . நேற்றைக்கு மூலதனம் தொடர் நூல்களில் முதல் நூலை சரிபார்த்து விட்டாராம் . முதல் பக்கத்தில் என் . சி . பி . எச் லோகோ சேர்த்திருந்தார் . இம்பிரிண்ட் பக்கத்தைச் சேர்த்திருந்தார் . பக்கத்தின் விளிம்ப...

வேலைகள் - God Building?

டிசம்பர் மாதம் , அதாவது புதிய ஆண்டுக்கு ஒரு மாதத்துக்கு முன்னர் புதிய ஓர் அணுகுமுறையைத் தொடங்க வேண்டியுள்ளது . எப்படி 10 ஆண்டுகளுக்கு முன்னர் புற உலகைப் புரிந்து கொள்வதற்கு மார்க்சின் மூலதனம் நூலைப் படிக்க , பின்பற்ற , கற்க , ஆய்வு செய்யத் தொடங்கினேனோ அது இன்றுவரை தொடர்கிறதோ அதுபோல அகஉலகைப் புரிந்து கொள்வதற்கு அம்பேத்கரின் புத்தரும் அவரது தம்மமும் என்ற நூலை அது போலவே படிக்க , பின்பற்ற , கற்க ஆய்வு செய்யத் தொடங்க வேண்டும் . புற உலகைப் பற்றி நமது அனுபவவாத புரிதல்கள் ஒருபுறமிருக்க , உண்மையான நிலைமை என்பதை கோட்பாட்டு அடிப்படையில் புரிந்து கொள்கிறோம் . மனிதரின் உணர்வுநிலை புறநிலையால் தீர்மானிக்கப்படுகிறது , புறநிலை உணர்வுநிலையால் தீர்மானிக்கப்படுவதில்லை என்பது மார்க்சின் ஃபயர்பாக் பற்றிய ஆய்வுரைகளில் முதன்மையானது . அதே நேரம் , அவர் புறநிலை மீது மனித உணர்வுள்ள செயல்பாட்டின் முதன்மையை அதே ஆய்வுரைகளில் வலியுறுத்தியுள்ளார் . எனவே , அகநிலையை பேணி வளர்ப்பது , மனதை பண்படுத்துவது (cultivation of mind) என்பது மார்க்சின் இயக்கவியல் பொருள்முதல்வாத அணுகுமுறைக்கு எதிரானது இல்லை . மார்க்சும் எங்கெல்சும...