இடுகைகள்

ஏப்ரல், 2024 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

வகைபிரித்தல் - மூலதனம், இந்திய சமூகம்

உற்பத்தியில் முன்னீடு செய்யப்படும் மூலதனத்தை, அதாவது திறனுடை மூலதனத்தை ·          நிலை மூலதனம், சுழல் மூலதனம் என்றும் ·          மாறா மூலதனம், மாறும் மூலதனம் என்றும் மார்க்ஸ் வகைபிரிக்கிறார். நிலை மூலதனம், சூழல் மூலதனம் என்ற வகைப்பிரிவுகளை ஆதாம் ஸ்மித்தே உருவாக்கியிருந்தார். ஆனால், அவற்றைப் பல இடங்களில் குழப்பியிருந்தால். மார்க்ஸ் அவற்றை துல்லியமாக மதிப்பின் அடிப்படையில் வரையறுத்தார். மதிப்பு எவ்வாறு உற்பத்திப் பொருளில் சேர்க்கப்பட்டு சுற்றியோடுகிறது என்ற அடிப்படையில் இந்த வகைப் பிரிப்பு அமைந்துள்ளது. இயந்திரங்கள், கட்டிடங்கள், பிற கருவிகள் போன்ற பல உற்பத்தி நிகழ்வுகளுக்கு நீடிக்கக் கூடியவற்றின் மதிப்பு உற்பத்தி நிகழ்முறையில் முழுமையாக உற்பத்திப் பொருளுக்குக் கடத்தப்படுவதில்லை. அவற்றின் மதிப்பு, அவை தேய்மானத்தின் மூலம் இழக்கும் அளவில் சன்னம் சன்னமாக உற்பத்திப் பொருளுக்குக் கடத்தப்படுகிறது. இவற்றின் வாழ்நாள் முடிந்த பிறகே, உற்பத்திப் பொருளை விற்றுக் கிடைத்த பணத்தில் தேய்மான நிதியமாக சேமிக்கப்பட்டதில் இருந்து அவற்றை மாற்றீடு செய்ய வேண்டியுள்ளது. இவற்றின் மதிப்பில் ஒரு பகுதி நி

லெனின் பிறந்தநாள்

இன்றைக்கு லெனின் பிறந்தநாள். மார்க்சிய லெனினியக் கட்சியின் நிறுவன நாள். இன்றைக்கும் நரேந்திர மோடி நக்சலைட் பூச்சாண்டி காட்டிக் கொண்டுதான் இருக்கிறார். காங்கிரஸ் கட்சி மீது மிக மோசமான அவதூறுகளை அண்டப் புளுகுகளை கட்டவிழ்த்து விட்டிருக்கிறார். செய்தியைப் பார்ப்பதற்கே அருவருக்கத்தக்க வகையிலான கருத்துக்களை மேடையில் முழங்கியிருக்கிறார். பெண்களின் தங்க நகைகளை, தனிநபர்களின் சொத்துக்களை, பழங்குடி மக்களின் நகைகளை பறித்து முஸ்லீம்களுக்கு வினியோகிக்கவிருக்கிறது, காங்கிரஸ். முஸ்லீம்களுக்குத்தான் சொத்துக்களில் முன்னுரிமை என்று 2006ஆம் ஆண்டில் அப்போதைய முதன்மை அமைச்சராக இருந்த காங்கிரசைச் சேர்ந்த மன்மோகன் சிங் சொன்னதை இதற்கு ஆதரமாகக் காட்டியுள்ளார். நிலைமை இவ்வளவு மோசமானது. ஒரு புல்வாமா நடக்கவில்லை என்றால் அதற்கு நிகரான கருத்தியல் பயங்கரவாதத்தைக் கட்டவிழ்த்து விடுவதில் மோடி சளைத்தவரில்லை. சரி, இப்போது என்ன செய்யப் போகிறோம். என்ன செய்து கொண்டிருக்கிறோம். இவற்றின் மூலம் 10 ஆண்டுகளில் 2034இல் எத்தகைய மாற்றங்களை காணவிருக்கிறோம். முதலில் மூலதனம் வாசிப்பு வட்டக் குழுக்கள் – குழுக்கள் பல்கிப் பெருகியி

சமூக மோதல்கள்

மிகவும் சிக்கலான நிலைமைகள்தான். அரசியல் சுழல்களின் மத்தியில் சிக்கியுள்ளேன். இளம் கம்யூனிஸ்ட் கழகத்திலும் சரி, நியூ செஞ்சுரி புத்தக நிலையத்திலும் சரி, மூலதனம் வாசிப்பு வட்ட வட்டாரத்திலும் சரி, குடும்ப தனிப்பட்ட உறவுகளிலும் சரி சுழல்களில் சிக்கியுள்ளேன். அப்படி சிக்குவதுதான் சரியானது. எல்லாவற்றையும் அமைதிப்படுத்தி சிக்கலின்றி நமது அக்கறைக்குரிய வட்டத்தை நமது ஆற்றலுக்கு ஏற்ற வட்டத்தை விடச் சின்னதாக வைத்துக் கொள்வது பொறுப்பின்மையைத்தான் காட்டுகிறது. எப்போதுமே நமது ஆற்றல் வட்டத்தை விட அக்கறை வட்டத்தை பெரிதாக வைத்துக் கொள்ள வேண்டும். ஆற்றல் வட்டத்துக்குள் அதன் எல்லை வரை செயல்படுவதன் மூலம் அதை விரிவுபடுத்திக் கொண்ட அக்கறை வட்டத்துக்கு விரிவடைந்து செல்ல வேண்டும். அதன் பிறகு மீண்டும் அக்கறை வட்டம் பரந்து விரிந்து செல்ல வேண்டும். இந்திய அரசியலையும் அதனோடு இயைந்த சமூக இயக்கத்தையும் புரிந்து கொள்ள அம்பேத்கரின் கோட்பாட்டு சட்டகம் பொருத்தமாக உள்ளது. புத்தரா கார்ல் மார்க்சா என்ற கட்டுரையையும் புத்தரும் கார்ல் மார்க்சும் என்ற உரையையும் படித்து விட்டேன். மார்க்ஸ் பற்றிய அம்பேத்கரின் வாசிப்பு, எங்க