சமூக மோதல்கள்
மிகவும் சிக்கலான நிலைமைகள்தான். அரசியல் சுழல்களின் மத்தியில் சிக்கியுள்ளேன். இளம் கம்யூனிஸ்ட் கழகத்திலும் சரி, நியூ செஞ்சுரி புத்தக நிலையத்திலும் சரி, மூலதனம் வாசிப்பு வட்ட வட்டாரத்திலும் சரி, குடும்ப தனிப்பட்ட உறவுகளிலும் சரி சுழல்களில் சிக்கியுள்ளேன். அப்படி சிக்குவதுதான் சரியானது.
எல்லாவற்றையும்
அமைதிப்படுத்தி சிக்கலின்றி நமது அக்கறைக்குரிய வட்டத்தை நமது ஆற்றலுக்கு ஏற்ற வட்டத்தை
விடச் சின்னதாக வைத்துக் கொள்வது பொறுப்பின்மையைத்தான் காட்டுகிறது. எப்போதுமே நமது
ஆற்றல் வட்டத்தை விட அக்கறை வட்டத்தை பெரிதாக வைத்துக் கொள்ள வேண்டும். ஆற்றல் வட்டத்துக்குள்
அதன் எல்லை வரை செயல்படுவதன் மூலம் அதை விரிவுபடுத்திக் கொண்ட அக்கறை வட்டத்துக்கு
விரிவடைந்து செல்ல வேண்டும். அதன் பிறகு மீண்டும் அக்கறை வட்டம் பரந்து விரிந்து செல்ல
வேண்டும்.
இந்திய
அரசியலையும் அதனோடு இயைந்த சமூக இயக்கத்தையும் புரிந்து கொள்ள அம்பேத்கரின் கோட்பாட்டு
சட்டகம் பொருத்தமாக உள்ளது. புத்தரா கார்ல் மார்க்சா என்ற கட்டுரையையும் புத்தரும்
கார்ல் மார்க்சும் என்ற உரையையும் படித்து விட்டேன். மார்க்ஸ் பற்றிய அம்பேத்கரின்
வாசிப்பு, எங்கெல்ஸ் அல்லது ஸ்டாலின் போன்ற வாசிப்பாகவே இருக்கிறது. அதை ஓரளவு நியாயப்படுத்தவும்
செய்யலாம். ஏனென்றால், பெரும்பான்மை மார்க்சிஸ்டுகளும் கம்யூனிஸ்ட் கட்சிகளும் அந்த
வாசிப்பையே தமது அடிப்படையாகக் கொண்டுள்ளனர்.
ஆனால்,
அம்பேத்கர் போன்ற ஒரு மேதை மார்க்சைப் பற்றிய தனது சொந்த வாசிப்பை செய்திருக்கலாம்.
குறிப்பாக, மூலதனம் நூலை அவர் வாசித்திருக்கலாம். மூலதனம் நூல் ஆங்கிலத்தில் கிடைப்பது
கூட அப்போது அரிதாகவே இருந்திருக்க வேண்டும். கம்யூனிசத்துக்கு போட்டியாக அம்பேத்கர்
பவுத்தத்தை முன் வைக்கிறார். கம்யூனிசம் வன்முறை மூலம் சாதிப்பதோடு கூட பல அவசியமான
அம்சங்களை அழித்தும் விடுகிறது என்பது அவரது குற்றச்சாட்டு. பாட்டாளி வர்க்கச் சர்வாதிகாரத்தை
ஏற்றுக் கொள்ளலாம், அது சமதர்மத்தைக் கொண்டு வருகிறது என்ற இலக்கை வைத்து. ஆனால், அதன்
பின் என்ன என்ற கேள்வி எழுகிறது. அரசு இல்லை என்றால் அராஜகமா? இதற்கு திட்டவட்டமான
விடை எதையும் மார்க்சிய மூலவர்களோ நடைமுறையோ தரவில்லை. அவை ஊக அடிப்படையிலேயே இருக்கின்றன.
அதே போல அம்பேத்கர் தனது வாதத்தை முன் வைக்கிறார். சமூகத்தை நல்வழிப்படுத்த சமயம் தேவை,
அது கடவுள் நம்பிக்கையையோ, சடங்குகளையோ, மறு உலகத்தையோ அடிப்படையாகக் கொண்டிராத பவுத்தம்
போல இருக்க வேண்டும். கிருத்தவ மதத்தில் இருப்பது போல வறுமையை பவுத்தம் கொண்டாடவில்லை.
மலைப் பிரசங்கம் போன்ற ஒன்று பவுத்தத்தில் இல்லை. எனவே, கிருத்துவத்தை அபின் என்று
சொல்வது போல பவுத்தத்தைச் சொல்ல முடியாது. பவுத்தம் செல்வம் சேர்ப்பதை ஊக்குவிக்கிறது.
ஆனால், தனிச்சொத்துடைமையை ஒழிப்பதற்கு வன்முறையற்ற வழியை முன் வைக்கிறது. வன்முறையை
நிராகரிக்கிறது. ஏனென்றால், வன்முறையால் சாதிக்கப்படும் இலக்குகள் தம்மளவில் பலவீனமாகி
விடுகின்றன.
புத்தரின்
வன்முறை மறுப்பு மகாவீரரின் வன்முறை மறுப்பைப் போன்று அறுதியானதில்லை. புத்தர் நியாயத்தை
நிலைநாட்ட வன்முறையை பயன்படுத்துவதை அங்கீகரிக்கிறார்.
அந்த
வகையில் சீனாவின் 1980-களுக்குப் பிந்தைய கொள்கை, இன்னும் சொல்லப் போனால் சீனக் கம்யூனிஸ்ட்
கட்சியின் தொடக்கத்தில் இருந்தே பின்பற்றிய கொள்கை வன்முறையை இரண்டாம் நிலையில்தான்
வைக்கிறது. ஐரோப்பிய பண்பாட்டுக்கும் ரசியப் பண்பாட்டுக்கும் சீனப் பண்பாட்டுக்கும்
இந்தியப் பண்பாட்டுக்கும் இடையே வேறுபாடுகள் உள்ளன. ஒவ்வொன்றும் தனக்கே உரிய தனித்தன்மைகளைக்
கொண்டுள்ளன. எனவே, பாரிஸ் கம்யூனைப் போலவே ரசியப் புரட்சி நடக்க வேண்டும் என்றோ ரசியப்
புரட்சியைப் போலவே சீனப் புரட்சி நடக்க வேண்டும் என்றோ, சீனப் புரட்சியைப் போலவே இந்தியப்
புரட்சி நடக்க வேண்டும் என்று கோர முடியாது.
எல்லா
இடங்களிலுமே தொழிலாளி வர்க்கம் வன்முறையை தவிர்க்கிறது, தன் தரப்பு வன்முறையை நியாயப்படுத்துவதற்கு
ஏற்ற சூழல் வரும் வரையில் வன்முறையைத் தவிர்க்கிறது. ஏனென்றால், வன்முறையும் கொலையும்
போரும் மனித சமூக முன்னேற்றத்துக்கு எதிரானவை என்பது ஒரு அடிப்படையான விதியாக உள்ளது.
வன்முறை அரசு வடிவத்தில் பிரிக்க முடியாமல் பிணைந்துள்ளது என்பதையும் அம்பேத்கர் அங்கீகரிக்கிறார்.
எனவே,
அம்பேத்கரின் கோட்பாட்டில் இந்தியாவையும் தாண்டி ஒரு உலகளாவிய பொருத்தப்பாடு உள்ளது.
வன்முறையின் மூலம்தான் சமூக மாற்றத்தை சாதிக்க முடியும் என்பதை ஒரு வறட்டுக் கோட்பாடாக
ஆக்கியுள்ளார்கள், மார்க்சிஸ்டுகளும் மார்க்சிய லெனினியவாதிகளும், மாவோயியவாதிகளும்.
வன்முறை பாதையை நிராகரிப்பவர்களை குட்டி முதலாளித்துவ கோழைகள் என்று முத்திரை குத்தி
விடுகிறார்கள். உழைக்கும் வர்க்கம் தினம் தினம் வன்முறையை எதிர்கொள்கிறது, எனவே, வன்முறை
மூலம்தான் ஆளும் வர்க்கத்தை ஒடுக்க முடியும் என்கிறார்கள்.
அது
போலவே பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் என்பதும் இறுதியில் தனிநபர் சர்வாதிகரமாகத்தான்
போய் முடிகிறது. முதலாளித்துவ நிறுவனத்திலும் அதேதான் நிலைமை. அதை லெனினும் அவசியம்
என்று அங்கீகரிக்கிறார். மாறிச் செல்லும் கட்டத்தில் சர்வாதிகாரமும் வன்முறையும் தேவை
என்று வைத்துக் கொண்டாலும் அதற்குப் பிறகு மக்களை வழிநடத்தப் போவது என்ன? நெறிசார்
வழிமுறைகள் தேவையா இல்லையா என்ற கேள்விக்கு, லெனின் தெளிவிற்ற ஒரு வாதத்தை முன் வைக்கிறார்.
பொது
இடத்தில் ஒரு பெண்ணிடம் முறைகேடாக நடந்து கொள்ளும் ஒருவனை கையாளுவது போல தவறிழைப்பவர்கள்
கையாள்வார்கள் என்கிறார். எது தவறு என்பதற்கு என்ன வரையறை? எக்காலத்துக்கும் பொருந்தும்
நெறிமுறைகள் இல்லை என்று சொல்லிவிட்டால், அது பொதுவுடைமை சமூகத்தின் நெறிமுறைகள் என்ன?
நிச்சயமாக கொல்லாமை, சக மனிதரின் உரிமையில் தலையிடாமை, என்று வரிசையாக புத்தரின் எட்டு
சீலங்கள் நிச்சயம் அவசியமாகத்தான் இருக்கின்றன.
சொல்லப்
போனால், அவற்றின் எண்ணிக்கை அதிகம்.
1. Religion is necessary for a free
Society.
2. Not every Religion is worth
having.
3. Religion must relate to facts of
life and not to theories and speculations about God, or Soul or Heaven or
Earth.
4. It is wrong to make God the centre
of Religion.
5. It is wrong to make salvation of
the soul as the centre of Religion.
6. It is wrong to make animal
sacrifices to be the centre of religion.
7. Real Religion lives in the heart
of man and not in the Shastras.
8. Man and morality must be the
centre of Religion. If not, Religion is a cruel superstition.
9. It is not enough for Morality to
be the ideal of life. Since there is no God it must become the law of life.
10. The function of Religion is to
reconstruct the world and to make it happy and not to explain its origin or its
end.
11. That the unhappiness in the world
is due to conflict of interest and the only way to solve it is to follow the
Ashtanga Marga.
12. That private ownership of
property brings power to one class and sorrow to another.
13. That it is necessary for the good
of Society that this sorrow be removed by removing its cause.
14. All human beings are equal.
15. Worth and not birth is the
measure of man.
16. What is important is high ideals
and not noble birth.
17. Maitri or fellowship towards all
must never be abandoned. One owes it even to one’s enemy.
18. Every one has a right to learn.
Learning is as necessary for man to live as food is.
19. Learning without character is
dangerous.
20. Nothing is infallible. Nothing is
binding forever. Every thing is subject to inquiry and examination.
21. Nothing is final.
22. Every thing is subject to the law
of causation.
23. Nothing is permanent or sanatan.
Every thing is subject to change. Being is always Becoming.
24. War is wrong unless it is for
truth and justice.
25.
The victor has duties towards the vanquished
(l) Right views i.e.-freedom from
superstition; (2) Right aims, high and worthy of the intelligent and earnest
men; (3) Right speech i.e. kindly, open, truthful; (4) Right Conduct i.e.
peaceful, honest and pure; (5) Right livelihood i.e. causing hurt or injury to
no living being; (6) Right perseverance in all the other seven; (7) Right
mindfulness i.e. with a watchful and active mind; and (8) Right contemplation
i.e. earnest thought on the deep mysteries of life.
கருத்துகள்
கருத்துரையிடுக