இடுகைகள்

ஜூன், 2024 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

அகநிலையை வெளிப்படுத்தல்

  ஜூன் 29, 2024 சனிக்கிழமை . காலை 4 மணி 30 நிமிடங்கள் . அம்பத்தூர் குப்பம் . இந்த வடிவம் எந்த அளவுக்கு சரியானது ? மார்க்ஸ் , அம்பேத்கர் இருவருமே தமது அகநிலை வெளிப்படுவதை மிகக் கவனமாக தவிர்த்துதான் தமது அரசியல் எழுத்துக்களை முன்வைத்திருக்கிறார்கள் . ஒருவகையில் அது முழு உண்மை கிடையாது . அண்ணல் அம்பேத்கர் தேவைப்படும் இடங்களில் தனது தீண்டாமை அனுபவங்களைக் குறிப்பிட்டிருக்கிறார் , தனது சாதனைகளையோ தனது பெருமைகளையோ அல்ல . தோழர் திருமாவளவன் அமைப்பாய் திரள்வோம் எழுதும் போதும் முழுக்க முழுக்க தன்னிலையை விலக்கி விட்டு எழுதுகிறார் . தென்னாப்பிரிக்கா இனவெறி மாநாட்டுக்குப் போவது பற்றிய குறிப்புகளில் தன்னைக் குறிப்பிடுகிறார் . அது வெறும் தகவல்களாகவே இருக்கிறது . அகநிலைக்குள் பெரிதாகப் போகவில்லை . இதற்கு மாறாக , மகாத்மா காந்தி போன்றவர்கள் , ஜெயமோகன் போன்றவர்கள் அகநிலையின் வெளிப்பாட்டை வியாபாரம் ஆக்குவதற்கான முன்னோடிகளாக உள்ளார்கள் . டால்ஸ்டாய் , தஸ்தாவ்ஸ்கி போன்றவர்கள் தமது அகநிலையை கற்பனை கதாபாத்திரங்களாக மாற்றி உலாவ விட்டார்கள் . தமது கதையைச் சொன்னார்கள் . இப்போது எனது அகநிலையை ஆயுதமா

ஒரு சவர்ண ஹிந்து ஆணின் வாழ்க்கையின் துயரங்களும் குழப்பங்களும்

  ஜூன் 27, 2024 – காலை 5 மணி முதல் 6 மணி வரை - அம்பத்தூர் குப்பம் " ஒரு சவர்ண ஹிந்து ஆணின் வாழ்க்கையின் துயரங்களும் குழப்பங்களும் " என்று இந்தப் பதிவுக்குத் தலைப்புக் கொடுக்கலாம் என்று தோன்றியது . சவர்ண ஹிந்து ஆண் என்பது a loaded term. துயரங்களும் குழப்பங்களும் என்பதையும் விளக்க வேண்டும் . சவர்ண ஹிந்து ஆண் என்பதைப் பற்றி நிறைய யோசித்து , நிறைய அசைபோட்டு அதை வந்தடைந்தேன் . துயரங்களும் குழப்பங்களும் என்பது கண நேரத்தில் தோன்றியது . அதற்கு முன்னதாக இந்த வலைப்பதிவைப் பற்றி ஒரு சொல் . From the cesspool of savarna hindu male world என்ற தலைப்பில் இப்போது எழுத வேண்டிய தேவை என்ன ? " சவர்ண ஹிந்து ஆண் என்ற சாக்கடைக்குள் இருந்து " என்பதுதான் தமிழில் தலைப்பு . எப்படி ஆசான் கார்ல் மார்க்ஸ் முதலாளித்துவ உலகின் புதிர்களை விடுவித்தாரோ , அதே போல அண்ணல் அம்பேத்கர் நான் மூழ்கி நீந்திக் கடக்கும் சாதியக் கட்டமைப்பு பற்றிய கோட்பாட்டுப் புரிதல்களை வழங்குகிறார் . கார்ல் மார்க்சின் மூலதனம் நூல் வாசிப்பு முதலில் அறிமுகம் ஆன போது , ஒரு புதுக் காதலன் போற அதையே சுற்றிச் சுற்றி வந்

மூலதனம், அம்பேத்கர் வாழ்க்கை, ருக்மாங்கதன்

1. மூலதனம் பற்றி நேற்று காலை ஆங்கில மூலதனம் வாசிப்பு - மூலதனம் மூன்றாம் பாகம், அத்தியாயம் 5 “மாறா மூலதனத்தில் சிக்கனம்" என்ற பகுதியை வாசித்து விவாதித்தோம். சென்ற செவ்வாய்க்கிழமை ஆங்கில மூலதனம் வாசிப்பு - மூலதனம் முதல் பாகம், இரண்டாம் ஜெர்மன் பதிப்புக்குப் பின்னுரை - இதன் பிற்பகுதியை வாசித்து விவாதித்தோம். நேற்று மாலை மறைமலைநகருக்குப் போகவில்லை, இன்று காலை இரண்டாம் பாகம் வாசிப்பிலும் கலந்து கொள்ளவில்லை, நேற்று இரவு மூன்றாம் பாகம் வாசிப்பிலும் கலந்து கொள்ளவில்லை. அடுத்து இன்று இரவு செங்கல்பட்டு அமர்வில்  மூலதனம் முதல் பாகம், அத்தியாயம் 25 “இயந்திர சாதனங்கள்" வாசிப்பில் கலந்து கொள்ள வேண்டும். இந்த மூன்று வாசிப்புகளையும் அடிப்படையாகக் கொண்டு மூலதனம் வாசிப்பு பற்றிய கட்டுரையை எழுத வேண்டும். சீன-அமெரிக்க முரண்பாடு என்ற கருப்பொருளை எடுத்துக் கொண்டு பொருத்த வேண்டும். இதனை செவ்வாய் இரவுக்குள் செய்து முடிக்க வேண்டும். 2. இளம் கம்யூனிஸ்ட் கழகம் கிளப் ஹவுஸ் உரையாடல் நாளை ருக்மாங்கதன் என்ற ஆர்கே என்ற கே பற்றி உரையாட திட்டமிட்டிருக்கிறோம். இதற்கு அ. மக்கள் அதிகாரம் பிரிவினர் எழுதியுள்ள அஞ்