உபரி-மதிப்பு - இலாபம்: முதலாளிகளிடையே பங்கிடப்படுவது
விவசாயக் கூலித் தொழிலாளரிடமிருந்து உபரி உழைப்பு கறக்கப்படுவதும் சரக்காக உற்பத்தியாகும் விவசாய விளைபொருளில் அது பொருள் வடிவாகி உபரி-மதிப்பாக இடம் பெறுவதும் ஒரு யதார்த்தம். இந்த உபரி-மதிப்பை விவசாயி (சிறு அல்லது நடுத்தர அல்லது கார்ப்பரேட்) முழுவதுமாக தன்வயப்படுத்த முடிய வேண்டியதில்லை. அது சந்தையில் போட்டி மூலமாக பிற முதலாளிகளால் (வணிக முதலாளி, ஆலை முதலாளி) கைப்பற்றப்படுகிறது. தொழிலாளி உபரி உழைப்பைக் கொடுக்கும் (அதாவது அவரிடமிருந்து விவசாயி உபரி உழைப்பைக் கறக்கும்) அதே நேரம் அது சேர்க்கும் உபரி-மதிப்பு விவசாயிக்குக் கிடைக்காமல் போய் அவர் இழப்பை எதிர்கொள்வதும் ஒரே நேரத்தில் இருக்கலாம். இதனை மூலதனம் மூன்றாம் தொகுதி, பகுதி II "இலாபம் சராசரி இலாபமாக மாற்றமடைதல்" என்பதில் நீங்கள் படித்திருக்கிறீர்கள். தொகுப்பாக, ஒரு சுரண்டல் முதலாளி (சொத்துடைமையாளர்) நஷ்டம் அடைவதாலேயே அவர் கூலி வேலைக்கு வைத்திருக்கும் தொழிலாளர்கள் சுரண்டப்படவில்லை என்று பொருள் இல்லை. உங்கள் கருத்திலிருந்து மார்க்ஸ் மூலதனம் நூலில் வேறுபடுகிறார். சிறு விவசாயியாகவே இருந்தாலும் அவர் கூலி உழைப்பைப் பயன்படுத்தினால் அ