சீனா - நமது எதிர்காலத்தின் பிரதிபிம்பம் (மூலதனம் முதல் பாகம், ஜெர்மன் முதல் பதிப்புக்கு முன்னுரை, பக்கம் 26) 1. இன்றைக்கு அமெரிக்காவின் கண்களில் விரல் விட்டி ஆட்டிக் கொண்டிருக்கிறது, சீனா. 140 கோடி மக்களுக்கும் உணவும், உடையும், கல்வியும், மருத்துவமும் உத்தரவாதம் செய்வதில் தொடங்கி, நவீன தொழில்நுட்பங்கள் சிலவற்றில் (சூரிய மின்சக்தி, 5G/6G தொலைதொடர்பு தொழில்நுட்பம், மைக்ரோசில்லுகள், விண்வெளி பயணம்) அமெரிக்காவுக்கு ஈடுகொடுத்து விஞ்சியிருக்கிறது. சீனா இதை எப்படி சாதித்தது? 30 ஆண்டுகளுக்கு முன்னர், சீனப் பொருளாதாரமும் இந்தியப் பொருளாதாரமும் கிட்டத்தட்ட ஒரே அளவில் (மொத்த உள்நாட்டு உற்பத்தி அடிப்படையில்) இருந்தன. உலகின் மற்ற எல்லா நாடுகளையும் போலவே, சோவியத் ஒன்றியத்தின் உடைவுக்குப் பின்னர் அமெரிக்காவின் புதிய தாராளவாத முதலாளித்துவத்தின் கிடுக்குப்பிடியில் இருந்தன. இந்த 30 ஆண்டுகளில் என்ன நடந்தது? அது இந்த 30 ஆண்டுகளின் கதை மட்டுமா அல்லது அதற்கு முந்தைய 40 ஆண்டுகளும் (1945-க்குப் பிறகு) சீனாவின் வெற்றிக் கதையில் தாக்கம் செலுத்தினவா? இதில் சீனாவின் சோசலிச கூறுகளின் (கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சிய...
ஜூன் 27, 2024 – காலை 5 மணி முதல் 6 மணி வரை - அம்பத்தூர் குப்பம் " ஒரு சவர்ண ஹிந்து ஆணின் வாழ்க்கையின் துயரங்களும் குழப்பங்களும் " என்று இந்தப் பதிவுக்குத் தலைப்புக் கொடுக்கலாம் என்று தோன்றியது . சவர்ண ஹிந்து ஆண் என்பது a loaded term. துயரங்களும் குழப்பங்களும் என்பதையும் விளக்க வேண்டும் . சவர்ண ஹிந்து ஆண் என்பதைப் பற்றி நிறைய யோசித்து , நிறைய அசைபோட்டு அதை வந்தடைந்தேன் . துயரங்களும் குழப்பங்களும் என்பது கண நேரத்தில் தோன்றியது . அதற்கு முன்னதாக இந்த வலைப்பதிவைப் பற்றி ஒரு சொல் . From the cesspool of savarna hindu male world என்ற தலைப்பில் இப்போது எழுத வேண்டிய தேவை என்ன ? " சவர்ண ஹிந்து ஆண் என்ற சாக்கடைக்குள் இருந்து " என்பதுதான் தமிழில் தலைப்பு . எப்படி ஆசான் கார்ல் மார்க்ஸ் முதலாளித்துவ உலகின் புதிர்களை விடுவித்தாரோ , அதே போல அண்ணல் அம்பேத்கர் நான் மூழ்கி நீந்திக் கடக்கும் சாதியக் கட்டமைப்பு பற்றிய கோட்பாட்டுப் புரிதல்களை வழங்குகிறார் . கார்ல் மார்க்சின் மூலதனம் நூல் வாசிப்பு முதலில் அறிமுகம் ஆன போது , ஒரு புதுக் காதலன் போற அதையே சுற்றிச் சுற்றி வந்...
சுரண்டல் சமூகத்தில் ஆளும் வர்க்கங்களின் அரசியல், பண்பாடு, கருத்தியல் ஆதிக்கம் செலுத்துகின்றன. சுரண்டப்படும் உழைக்கும் மக்களின் போராட்டமும் வாழ்க்கை நிலைமையும் தொகுக்கப்படாமல் சிதறடிக்கப்படுகின்றன. 18ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் 19ஆம் நூற்றாண்டின் முதல் பாதியிலும் மேற்கு ஐரோப்பாவை மையமாகக் கொண்டு உலக அளவில் முதலாளித்துவ உற்பத்தி முறை மாபெரும் வளர்ச்சி பெற்றது. அது தொடர்பான கோட்பாட்டாக்கப் பணியை முதலாளித்துவ வரம்புக்குள் இருந்த ஆதாம் ஸ்மித், ரிக்கார்டோ போன்ற அறிஞர்களே செய்தனர். முதலாளித்துவச் சுரண்டலுக்கு எதிரான தொழிலாளி வர்க்கத்தின் போராட்டங்களும் இயக்கமும் தீவிரமடைந்தபோது, முதலாளிகளுக்கு சேவை செய்யும் கொச்சைப் பொருளாதாரவியல் அல்லது சப்பைக்கட்டுவாதம் தோன்றியது. மாறிவந்த புறநிலை தானாகவே தொழிலாளர்களுக்கான புரட்சிகரக் கோட்பாட்டை உருவாக்கி விடவில்லை. கார்ல் மார்க்சின் மகத்தான கோட்பாட்டு ஆக்கமான மூலதனம் நூல் முதலாளித்துவ உற்பத்தி முறையின் தோற்றத்தில் தொடங்கி அதன் இயக்கத்தையும் அதன் இறுதி முடிவையும் பற்றிய ஒவ்வொரு இழையையும் தொழிலாளி வர்க்கத்தின் பார்வையில் இருந்து ஆய்வு செய்து முன்வைத்தத...
கருத்துகள்
கருத்துரையிடுக