இடுகைகள்

மே, 2024 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

தெருக்குரல்

மனத்துக்கண் சாதியிலன் ஆதல் அனைத்தறன் ஆகுல நீர பிற வாழின் சாதியொழித்து வாழ்க அஃதிலார் வாழின் வாழாமை நன்று 

arguments about caste and untouchability in the works of Babasaheb Dr Ambedkar

இந்தியாவில் சாதிகள், சாதியை அழித்தொழித்தல் – தொகுதி 1 - English Volume 1 2.     இந்து மதத்தின் தத்துவம், இந்தியாவும் பொதுவுடைமைக்கான முற்படு தேவைகளும் – தொகுதி 6 - English Volume 3 3.     இந்தியாவில் புரட்சியும் எதிர்ப்புரட்சியும், புத்தரா கார்ல் மார்க்சா – தொகுதி 7 – English Volume 3 4.     இந்து மதத்தின் புதிர்கள் – தொகுதி 8 – English Volume 4 5.     தீண்டப்படாதவர்கள் அல்லது இந்தியச் சேரிகளின் குழந்தைகள் – தொகுதி 9 - English Volume 5 6.     தீண்டாமையும் தீண்டப்படாதவர்களும் சமூகம்-அரசியல்-மதம் – தொகுதி 10 – English Volume 5 7.     சூத்திரர்கள் யார்? – தொகுதி 13 – English Volume 7 8.     தீண்டப்படாதவர்கள் யார்? – தொகுதி 14 – English Volume 7 9.     தீண்டப்படாதவர்களுக்கு காங்கிரசும் காந்தியும் சாதித்தது என்ன? - தொகுதி 16, 17 – English Volume 9

இணைய உறவாடல்கள்

இணைய வெளியில் சந்திக்கும் நாம் பெரும்பாலும் நம்மோடு உரையாடுபவர்கள் முன்வைக்கும் அவர்களது ஒரு பரிமாணத்தை மட்டும்தான் பார்க்கிறோம். அதற்கு எதிர்வினை ஆற்றுகிறோம். இங்கு ஒற்றைப் பரிமாணத்தில் கருத்தைப் பகிரும் ஒருவருக்குப் பின்னால் ஒரு முழு வாழ்க்கை உள்ளது, அவர் கடந்து வந்த வாழ்க்கை நம்மிலிருந்து வேறுபட்டிருக்கலாம், அவர் வாழும் வாழ்க்கை அவருக்கு வேறு பார்வைகளைக் கொடுத்திருக்கலாம் என்ற புரிதல் நிதானமாக யோசிக்கும்போது நம் எல்லோருக்குமே இருக்கிறது.  ஆனால், உரையாடலின் சூட்டில் அது மறந்து போகிறது. எப்படியாவது நமக்கு எதிராக உரையாடுபவர்களை காயப்படுத்தி விட வேண்டும், களத்தை விட்டு துரத்தி விட வேண்டும், வெற்றி வாகை சூடி விட வேண்டும் என்ற எண்ணம்தான் முன்னுக்கு நிற்கிறது. அதற்கு ஒவ்வொருவருமே வெவ்வேறு நேரங்களில் பலியாகி விடுகிறோம் (இக்குழுவின் மட்டுறுத்துனர்கள் உட்பட). இது தொடர்பாக, என்னுடைய மலரும் நினைவுகள் சில, பொறுத்துக் கொள்ளுங்கள்.  1. முதன்முதலில் நான் பங்கேற்ற தமிழ் இணையக் குழுமம் tamil.net நடத்திய மின்னஞ்சல் குழு (mailing list). அதில் tamil@tami.net என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பினால் குழுவி

அம்பேத்கரும் சோசலிசமும் - இளம் கம்யூனிஸ்ட் கழகம்

 1. அறிவியல் சோசலிசம் என்பது YCLஇன் இலக்கு. YCLஇன் திட்டத்தில், சாதி ஒழிப்பு ஜனநாயகப் புரட்சிக்கான திட்டமும் மூலதனத்தைத் தூக்கி எறிந்து சோசலிசத்தை நிறுவுவதற்கான திட்டமும் இணைந்தவை. அவற்றில் முதல் கட்டத்தில் சாதி ஒழிப்பு ஜனநாயகப் புரட்சி முன்னிலை வகிக்கிறது, சோசலிசத்துக்கான போராட்டம் அதோடு இயைந்து அதற்கு சேவை செய்கிறது. ஏனென்றால், சாதி ஒழிப்பு ஜனநாயகப் புரட்சி சோசலிசத்துக்கான முன்தேவை (prerequisite of socialism - communism). இது அண்ணல் அம்பேத்கரின் இந்திய ஜனநாயகப் புரட்சிக்கான கோட்பாடு என்று நான் எழுதி வைத்த உருவரையில் 26வது கூறாக இடம் பெறுகிறது. "சாதி ஒழிப்பு ஜனநாயகப் புரட்சி இந்தியாவில் பொதுவுடைமைக்கான முன்தேவை ஆகும்." 2. தேபிபிரசாத்தின் கட்டுரையும் இந்திய தத்துவம் பற்றிய அவரது பிற ஆய்வு நூல்களும், புரட்சிகர அரசியலில் புறநிலைக்கும் அகநிலைக்கும் இடையேயான உறவையும், இந்தியாவில் இந்து மதக் கருத்துக்கள் செலுத்தும் எதிர்ப்புரட்சிகர தாக்கத்தையும் தெளிவுபடுத்துகின்றன. "ஃபாயர்பாகின் பொருள்முதல்வாதம் உள்ளிட்டு இதுவரை [மார்க்ஸ் வரை] இருந்து வந்திருக்கும் எல்லாப் பொருள்முதல்வாதத்தி

இந்தியாவில் சாதி ஒழிப்பு ஜனநாயகப் புரட்சிக்கான அண்ணல் அம்பேத்கரின் கோட்பாடு:

இந்துச் சமூகம்: 1. இந்து சமூகம் படிநிலை ஏற்றத்தாழ்வு (graded inequality) அடிப்படையில் அமைக்கப்பட்டுள்ளது. இதில் பார்ப்பனர், சத்திரியர், வைசியர், சூத்திரர் என்ற நான்கு வருணங்களிலும் தீண்டப்படாதவர்கள் என்ற பிரிவிலும் நூற்றுக்கணக்கான சாதிகள் படிநிலை வரிசையில் வைக்கப்பட்டுள்ளன. 2. ஒவ்வொரு சாதியும் பிற சாதிகளைச் சேர்ந்தவர்களுடன் சேர்ந்து உண்ண தடை, ஒரே இடத்தில் சேர்ந்து வாழத் தடை, சாதிக்கு வெளியே திருமண உறவிற்குத் தடை விதிக்கும் அகமண முறை ஆகிய சமூக வழக்கங்களைப் பின்பற்றுகின்றன. சுருக்கமாகச் சொன்னால், ஒவ்வொரு சாதியும் தனக்கென உணவுமுறை, வழிபாட்டுச் சடங்குகள், உறவுமுறைகள் என ஒரு தனிக் குடியரசாக அமைந்துள்ளது. 3. இந்தப் படிநிலை ஏற்றத்தாழ்வு கட்டமைப்பின் உச்சத்தில் உள்ள பார்ப்பனர்கள் சூத்திர சாதிகள் மற்றும் தீண்டப்படாதவர்களாக செய்யப்பட்ட பெரும்பான்மை மக்களின் உழைப்பைச் சுரண்டி செல்வச் செழிப்பிலும், சமூக அந்தஸ்துடனும் வாழ்கின்றனர். சத்திரியர், வைசியர் இரு பிரிவினரும் பார்ப்பனருக்கு அடுத்தடுத்த நிலையில் வைக்கப்பட்டு உள்ளனர். பார்ப்பன சாஸ்திரங்களின்படி குற்றவியல் தண்டனைத் தொகுப்பில் கூட பார்ப்ப

சாதி ஒழிப்பு ஜனநாயகப் புரட்சி அம்பேத்கரின் கோட்பாடு

  சாதி ஒழிப்பு ஜனநாயகப் புரட்சி அம்பேத்கரின் கோட்பாடு (இந்தியா பற்றிய மார்க்சின் கருத்துக்களையும், சமூக வளர்ச்சி பற்றிய எங்கெல்சின் கோட்பாட்டையும் இணைத்து) இந்தியாவைப் பற்றி மார்க்ஸ் -        நியூயார்க் டெய்லி டிரிப்யூன் கட்டுரைகள் -        மானுடவியல் குறிப்பேடுகள் குடும்பம், தனிச்சொத்து, அரசு ஆகியவற்றின் தோற்றம் -        இனக்குழு, குலக்குழு அடிப்படையிலான அநாகரிக சமுதாயங்கள் -        ஆரியர்கள், திராவிடர்கள் (நாகர்கள்), பிற பழங்குடியினர் இந்தியாவில் சாதிகள் -        பார்ப்பனர்கள் தொடங்கி வைத்த வட்டமிட்டுக் கொள்ளுதல் – விலக்கி வைத்தலும், போலச் செய்தலும் -        அகமண முறையும் ஆண்-பெண் எண்ணிக்கை சமநிலையும் -        இனக்கலப்பு பற்றி சாதியை அழித்தொழித்தல் -        சாதி என்பது படிநிலை ஏற்றத்தாழ்வு -        அகமணமுறை சாதியைத் தாங்கிப் பிடிக்கும் ஆதாரத் தூண் -        இந்த ஆதாரத் தூணை வலுப்படுத்துவது சாஸ்திரங்கள் மீது இந்துக்கள் கொண்டுள்ள நம்பிக்கை காந்தியும் காங்கிரசும் தீண்டப்படாதவர்களுக்கு செய்தது என்ன? திரு காந்தியும் தீண்டப்படாதவர்கள் விடுதலையும் சூத்திரர

உபரி மதிப்பைப் புரிந்து கொள்ள... சிறு குறிப்பு

உபரி மதிப்பைப் புரிந்து கொள்ள வேண்டுமானால் சந்தையில் விற்கும் பொருட்களின் (அவற்றை சரக்கு என்று அழைக்கலாம்) மதிப்பைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும். ஒரு பொருள் இயற்கையிலேயே கிடைக்கிறது என்றால் யாரும் அதை விலை கொடுத்து வாங்க மாட்டார்கள். எடுத்துக்காட்டாக நாம் சுவாசிக்கும் காற்று. அதாவது, சட்டை போன்ற ஒரு பொருளை நாம்   விலை கொடுத்து வாங்குவதற்குக் காரணம் அதை உற்பத்தி செய்ய உழைப்பு தேவைப்படுகிறது என்பதே. அதாவது, சட்டை போன்ற ஒரு பொருளை உற்பத்தி செய்யத் தேவைப்படும் மொத்த உழைப்பே   அதன் மதிப்பு.   இந்த மொத்த உழைப்பில் பஞ்சில் இருந்து நூல் ஆக மாற்றும் உழைப்பு, நூலில் இருந்து துணியாக மாற்றும் உழைப்பு, துணியை சட்டையாகத் தைக்கும் உழைப்பு ஆகியவற்றையும் அதே போல பட்டன்கள், தையல் இயந்திரம் ஆகியவற்றை உருவாக்கச் செலவிட்ட உழைப்பு என   சட்டையை வாங்குவதற்கு பதிலாக நாம் என்ன கொடுக்கிறோம். மற்றவர்களின் உழைப்புக்குப் பதிலாக நமது உழைப்பைக் கொடுக்கிறோம். நாமே ஒரு பொருளை (எடுத்துக்காட்டாக, நெல் என்று வைத்துக் கொள்வோம்) உழைப்பு செலுத்தி உற்பத்தி செய்யலாம். அந்த நெல்லைக் கொடுத்து சட்டையை வாங்கலாம்.   இந்தப்