இடுகைகள்

செப்டம்பர், 2024 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

இந்தியாவில் கம்யூனிஸ்டுகள்: இந்து மதம் - பௌத்தம்

 1. கம்யூனிஸ்ட் பற்றிய குறுகிய வரையறை:  சுரண்டல் சமூகத்தின் அநீதிகளைக் கண்டு கொதித்தெழுந்து, அவற்றை ஒழித்துக் கட்டுவது என்ற நோக்கத்துடன், சமூகக் கட்டமைப்பின் இயங்கு விதிகளை அறிவியல் அடிப்படையில் (புறநிலை அடிப்படையில்) ஆய்வு செய்து அந்த ஆய்வு தரும் முடிவுகளை அடிப்படையாகக்  கொண்டு அமைப்பாகத் திட்டம் வகுத்துக் கொண்டு செயல்படுபவர்; சுரண்டும் வர்க்கங்களின் அதிகாரத்தைத் தூக்கி எறிந்து உழைக்கும் மக்களின் சர்வாதிகாரத்தை நிறுவுவதன் மூலம் சுரண்டலற்ற சமூகத்தைக் கொண்டு வருவதற்கு உழைப்பவர். இதில் நம் நாட்டில், சமூக அநீதிகளைக் கண்டு கொதித்தெழுவதும் சுரண்டலற்ற சமூகத்தைக் கொண்டு வருவதற்கு உழைப்பதும் மற்ற நாடுகளைப் போலவே பொருந்துகிறது. ஆனால், இந்தியப் புறநிலை பற்றிய ஆய்வும் புரிதலும் சூத்திரங்களை இயந்திரகதியாக பொருத்துவதை அடிப்படையாகக் கொண்டுள்ளது, எனவே கம்யூனிஸ்டுகளின் திட்டமும் செயல்பாடும் பரந்துபட்ட மக்களின் வர்க்கப் போராட்ட வடிவங்களில் இருந்து துண்டிக்கப்பட்டுள்ளது.  2. "கம்யூனிஸ்டுகள் மதம் மற்றும் மூடநம்பிக்கைகளைக் கடந்தவர்கள். அறிவியல் அணுகுமுறை ஒன்றையே - உற்பத்தி, அரசியல், சமுதாய வாழ்கை - வ

உபரி-மதிப்பு - இலாபம்: முதலாளிகளிடையே பங்கிடப்படுவது

 விவசாயக் கூலித் தொழிலாளரிடமிருந்து உபரி உழைப்பு கறக்கப்படுவதும் சரக்காக உற்பத்தியாகும் விவசாய விளைபொருளில் அது பொருள் வடிவாகி உபரி-மதிப்பாக இடம் பெறுவதும் ஒரு யதார்த்தம்.  இந்த உபரி-மதிப்பை விவசாயி (சிறு அல்லது நடுத்தர அல்லது கார்ப்பரேட்) முழுவதுமாக தன்வயப்படுத்த முடிய வேண்டியதில்லை. அது சந்தையில் போட்டி மூலமாக பிற முதலாளிகளால் (வணிக முதலாளி, ஆலை முதலாளி) கைப்பற்றப்படுகிறது.  தொழிலாளி உபரி உழைப்பைக் கொடுக்கும்  (அதாவது அவரிடமிருந்து விவசாயி உபரி உழைப்பைக் கறக்கும்) அதே நேரம் அது சேர்க்கும் உபரி-மதிப்பு விவசாயிக்குக் கிடைக்காமல் போய் அவர் இழப்பை எதிர்கொள்வதும் ஒரே நேரத்தில் இருக்கலாம்.  இதனை மூலதனம் மூன்றாம் தொகுதி, பகுதி II "இலாபம் சராசரி இலாபமாக மாற்றமடைதல்" என்பதில் நீங்கள் படித்திருக்கிறீர்கள்.  தொகுப்பாக, ஒரு சுரண்டல் முதலாளி (சொத்துடைமையாளர்) நஷ்டம் அடைவதாலேயே அவர் கூலி வேலைக்கு வைத்திருக்கும் தொழிலாளர்கள் சுரண்டப்படவில்லை என்று பொருள் இல்லை. உங்கள் கருத்திலிருந்து மார்க்ஸ் மூலதனம் நூலில் வேறுபடுகிறார். சிறு விவசாயியாகவே இருந்தாலும் அவர் கூலி உழைப்பைப் பயன்படுத்தினால் அ

வாழை பேசும் வாழ்வியல்

மாரி செல்வராஜ் எழுதிய இயக்கி தயாரித்த வாழை திரைப்படம் பேசும் உழைப்புச் சுரண்டல் என்ற தலைப்பில் தொடங்கி பல பொருட்களில் உரையாடல் நடந்திருக்கிறது. அவற்றில்      கலை - யதார்த்தம், சோசலிச யதார்த்தம்     திரைமொழி என்ற வடிவம்     மாரி செல்வராஜின் அரசியல்     போராடும் வடிவம்     குட்டி முதலாளித்துவ அற்பவாதம்     மூலதனத்தின் கணக்கு     மூலதனம் நூல் எனப் பல கூறுகள் பேசப்பட்டன. இவை அனைத்துமே வாழை என்ற திரைப்படத்துடன் இணைந்துள்ளன. இவை அனைத்தும் இணைந்ததுதான் வாழை திரைப்படம். ஒவ்வொரு சமூக நிகழ்வும் இப்படி பல பகுதிகள் இணைந்த முழுமையாகவே உள்ளது.  அ. மூலதனம் நூலை வாசிப்பதில் ஒரு கம்யூனிஸ்ட் பெறும் அறிவுச் செல்வங்கள் மூன்று முதன்மையாக, ஒரு சிக்கலான சமூக நிகழ்வை ஆய்வு செய்வது எப்படி? அந்த ஆய்வின் மூலம் வந்தடைந்த கருத்துகளை முன்வைப்பது எப்படி? இரண்டாவதாக, அத்தகைய சிக்கலான ஒரு சமூக நிகழ்வான முதலாளித்துவ சமூகத்தின் இயக்க விதிகள் என்ன? மூலதனம் எவ்வாறு செயல்படுகிறது? உபரி-மதிப்பின் உற்பத்திக்கும் இலாபத்துக்கும் இடையேயான உறவுகள். மூலதனத்தின் பல்வேறு வடிவங்கள் - திறனுடை மூலதனம், சரக்கு மூலதனம், பண மூலதனம். மூன்

மார்க்ஸ்: மூலதனம் - அம்பேத்கர்: இந்திய வரலாற்றியல்

 சுரண்டல் சமூகத்தில் ஆளும் வர்க்கங்களின் அரசியல், பண்பாடு, கருத்தியல் ஆதிக்கம் செலுத்துகின்றன. சுரண்டப்படும் உழைக்கும் மக்களின் போராட்டமும் வாழ்க்கை நிலைமையும் தொகுக்கப்படாமல் சிதறடிக்கப்படுகின்றன. 18ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் 19ஆம் நூற்றாண்டின் முதல் பாதியிலும் மேற்கு ஐரோப்பாவை மையமாகக் கொண்டு உலக அளவில் முதலாளித்துவ உற்பத்தி முறை மாபெரும் வளர்ச்சி பெற்றது. அது தொடர்பான கோட்பாட்டாக்கப் பணியை முதலாளித்துவ வரம்புக்குள் இருந்த ஆதாம் ஸ்மித், ரிக்கார்டோ போன்ற அறிஞர்களே செய்தனர். முதலாளித்துவச் சுரண்டலுக்கு எதிரான தொழிலாளி வர்க்கத்தின் போராட்டங்களும் இயக்கமும் தீவிரமடைந்தபோது, முதலாளிகளுக்கு சேவை செய்யும் கொச்சைப் பொருளாதாரவியல் அல்லது சப்பைக்கட்டுவாதம் தோன்றியது. மாறிவந்த புறநிலை தானாகவே தொழிலாளர்களுக்கான புரட்சிகரக் கோட்பாட்டை உருவாக்கி விடவில்லை. கார்ல் மார்க்சின் மகத்தான கோட்பாட்டு ஆக்கமான மூலதனம் நூல் முதலாளித்துவ உற்பத்தி முறையின் தோற்றத்தில் தொடங்கி அதன் இயக்கத்தையும் அதன் இறுதி முடிவையும் பற்றிய ஒவ்வொரு இழையையும் தொழிலாளி வர்க்கத்தின் பார்வையில் இருந்து ஆய்வு செய்து முன்வைத்தது. ப