இந்தியாவில் கம்யூனிஸ்டுகள்: இந்து மதம் - பௌத்தம்
1. கம்யூனிஸ்ட் பற்றிய குறுகிய வரையறை: சுரண்டல் சமூகத்தின் அநீதிகளைக் கண்டு கொதித்தெழுந்து, அவற்றை ஒழித்துக் கட்டுவது என்ற நோக்கத்துடன், சமூகக் கட்டமைப்பின் இயங்கு விதிகளை அறிவியல் அடிப்படையில் (புறநிலை அடிப்படையில்) ஆய்வு செய்து அந்த ஆய்வு தரும் முடிவுகளை அடிப்படையாகக் கொண்டு அமைப்பாகத் திட்டம் வகுத்துக் கொண்டு செயல்படுபவர்; சுரண்டும் வர்க்கங்களின் அதிகாரத்தைத் தூக்கி எறிந்து உழைக்கும் மக்களின் சர்வாதிகாரத்தை நிறுவுவதன் மூலம் சுரண்டலற்ற சமூகத்தைக் கொண்டு வருவதற்கு உழைப்பவர். இதில் நம் நாட்டில், சமூக அநீதிகளைக் கண்டு கொதித்தெழுவதும் சுரண்டலற்ற சமூகத்தைக் கொண்டு வருவதற்கு உழைப்பதும் மற்ற நாடுகளைப் போலவே பொருந்துகிறது. ஆனால், இந்தியப் புறநிலை பற்றிய ஆய்வும் புரிதலும் சூத்திரங்களை இயந்திரகதியாக பொருத்துவதை அடிப்படையாகக் கொண்டுள்ளது, எனவே கம்யூனிஸ்டுகளின் திட்டமும் செயல்பாடும் பரந்துபட்ட மக்களின் வர்க்கப் போராட்ட வடிவங்களில் இருந்து துண்டிக்கப்பட்டுள்ளது. 2. "கம்யூனிஸ்டுகள் மதம் மற்றும் மூடநம்பிக்கைகளைக் கடந்தவர்கள். அறிவியல் அணுகுமுறை ஒன்றையே - உற்பத்தி, அரசியல், சமுதாய வாழ்கை - வ