இடுகைகள்

சங்கிகளுக்கு சேவை செய்யும் கோட்பாடு எது?

 அய்யோ தோழனே, நண்பா! இவ்வளவு அப்பாவியா இருக்கிறீங்களே! சங்கிக்கு நீங்க இப்படி பேசினாத்தான் பிடிக்கும். உங்களை நாத்திகன் (வேதங்களை மறுப்பவன் என்று பொருள்) என்று பட்டம் சூட்டி அழகு பார்ப்பான். கம்யூனிஸ்டுகள் இப்படியே கோட்பாடு பேசிக் கொண்டிருந்தால் அவனோட அரசியல் ஆட்சிக்கு சமூக ஆதிக்கத்துக்கு எந்த அச்சுறுத்தலும் கிடையாதுன்னு அவனுக்குத் தெரியும். ஆனா, தோழருங்க நமக்கு அந்த நோக்கம் இல்லையே, அவனை வீழ்த்தி உழைக்கும் மக்களின் ஆட்சிக்காக வேலை செய்யும்போது இந்தியாவில் சாதிகள் பற்றிய இப்படிப்பட்ட அப்பாவித்தனமான கருத்து நமது புரட்சிகர இயக்கத்துக்கு எதிரா போகுதேன்னு பதறுது, உங்களை விமர்சிக்கிறோம். சங்கிகளைப் பொறுத்தவரைக்கும் சாதியையோ தீண்டாமையோ சர்வதேசச் சிக்கல் ஆக்கி விடக் கூடாதுன்னு கவனம் இருக்கு, அதனால "ஜப்பான்ல ஜாக்கி சானும் அப்படித்தான் பிரான்சில எலான் மஸ்கும் அப்படித்தான்ர நாங்க என்ன அவ்வளவு மோசம் என்ன சில கோடி பேரை சமூகமா ஒதுக்கி வைத்து கொடூரமா சுரண்டுகிறோம் மனித உரிமைகளையே மறுக்குறோம், இன்னும் பல கோடி பேருக்கு கல்வியும் அரசியலும் கிடையாதுன்னு மறுக்கிறோம். அதை சாத்திரத்திலையும் எழுதி வைச்...

இந்து மனசாட்சிக்கு ஆறுதல் தேட வேண்டுமா?

 இந்தியாவைப் பற்றி மார்க்ஸ்  "இந்த அமைதியான கிராமச் சமூகங்கள் சாதுக்களாக தோன்றியபோதிலும் கீழ்கண்ட கொடுங்கோன்மைகளுக்குத் திட்டமான அடிப்படையாக இருந்தன என்பதை நாம் மறக்க முடியாது  அந்தச் சமூகங்கள் மனித மூளையை சின்னஞ்சிறு கூட்டுக்குள் அடைத்து அதை மூட நம்பிக்கையின் சுலபமான கருவிகளாகவும் பரம்பரைச் சமுதாய விதிகளின் அடிமையாகவும் ஆக்கியதையும் சகல வகைப்பட்ட சிறப்புகளையும் சரித்திர பூர்வமான சக்திகளையும் மனித மூளை பெறமுடியாமல் செய்ததையும் நாம் மறக்கமுடியாது. சின்னஞ்சிறு நிலத்தில் குவிந்துகொண்டு பேரரசுகள் வீழ்ச்சி அடைவதையும் வர்ணிக்க முடியாத கொடுமைகள் நிகழ்வதையும் பெரிய நகரங்களில் மக்கள் படுகொலை செய்யப்படுவதையும் பொருட்படுத்தாத  அந்தச் சமூகங்களின் காட்டுமிராண்டித்தனமான தன்னகங்காரத்தை நாம் மறக்க முடியாது  இயற்கையில் நிகழும் சம்பவங்கள் சம்பந்தமாக எவ்வளவு அக்கறை காட்டினார்களோ அதே அளவு அக்கறையைத்தான் மேற்சொன்ன சம்பவங்கள் பாலும் காட்டினார்கள்  தவிர எந்த ஆக்கிரமிப்பாளனுடைய கவனமாவது இதன்மீது விழுந்துவிட்டால் இந்தச் சமூகங்கள் எதிர்க்க வகையில்லாமல் ஆக்கிரமிப்பிற்கு இறையாகின...

லெனினை வாசித்தல்

 மாவோ தனது புதிய ஜனநாயகம் என்ற நூலில் இருபதாம் நூற்றாண்டுக்குப் பிந்தைய சகாப்தத்தை லெனினிய சகாப்தம் என்று குறிப்பிடுவார். ஏகாதிபத்தியமும் பாட்டாளி வர்க்கப் புரட்சிகளும் என்பது அதன் உள்ளடக்கம். இந்த லெனினிய சகாப்தத்தில் லெனினின் பெயர் எத்தனை பேருக்குத் தெரிந்திருக்கிறது? கம்யூனிஸ்ட் கட்சிகளில் அல்லது அதற்கு எதிரான அரசியலில் இருப்பவர்களைத் தவிர மற்றவர்களுக்கு லெனின் என்பது ஒரு பெயர் என்பதைத் தாண்டி பெரிதாகத் தெரிவதில்லை. இதற்கு முந்தைய தலைமுறையில் 1960-களில் தொடங்கி 1990-கள் வரை தமிழ்நாட்டில் வளர்ந்தவர்களுக்கு லெனினும் சோவியத் ஒன்றியமும் தவிர்க்க முடியாத பெயர்கள். அரசியல் கல்வியும் அறிவியல் கல்வியும் கொடுத்த வற்றாத அறிவுக் களஞ்சியங்களை அள்ளி அள்ளிக் கொடுத்துக் கொண்டிருந்தது அப்போது இருந்த சோவியத் சோசலிச குடியரசுகளின் ஒன்றியம்.  கடந்த 40 ஆண்டுகளாக இந்த இலக்கியங்கள் பொதுவெளியில் இருந்து மறைந்து போயிருக்கின்றன. பழைய சோவியத் நூல்களில் எஞ்சியவை அல்லது அவ்வப்போது சில பதிப்பகங்கள் வெளியிடும் தனிநூல்கள் இவற்றைத் தாண்டி லெனினின் ஆக்கங்களுக்கு ஒரு பதிப்புத் துறை சந்தை இல்லாமல் போயிருந்தது...

லெனின் - வாழ்வும் பணியும் - குறிப்புகள்

Iskra – spark Zarya – Dawn Vperyod Proletary Rabochi 1870 - 1893 வரை சொந்த வாழ்க்கை 1886 - தந்தை மரணம் 1887 - அண்ணன் மரண தண்டனை 1888 - மார்க்சின் மூலதனம் நூலை வாசித்தல் 1889 - லெனின் பங்கேற்ற மார்க்சியக் குழுவின் பிற உறுப்பினர்கள் கைது (காசன் நகரில்) 1890 - கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை மொழிபெயர்ப்பு, சமராவில் மார்க்சியப் பரப்புரை - செயின்ட் பீட்டர்ஸ்பர்க் பல்கலைக் கழகத்தின் சட்டப் படிப்பு தேர்வு எழுத அனுமதி 1891 - சட்டப் படிப்பு - பீட்டர்ஸ்பர்க் - சமரா 1892 - சட்டத்துறையில் பணியாற்ற உரிமம், நரோத்னிக்குகளின் கருத்துகள் மீதான விமர்சனம் 1893 - 1904 ஜனநாயகப் புரட்சிக்கான போராட்டம் 1893 சமரா மார்க்சியக் குழு - பீட்டர்ஸ்பர்க் மார்க்சிய வட்டத்தில் இணைதல் 1894  Lenin writes What the “Friends of the People” Are and How They Fight the Social-Democrats, the first part of which appeared that spring. 1895இல் வெளிநாட்டில் - தொழிலாளர் விடுதலைக் குழுவுடன் தொடர்பு - வேரா சசூலிச், பிளகனவ், ஆக்சல்ரோத், மார்த்தவ் கைது, சிறையில் விசாரணை - நான்கு விசாரணைகள் கிழக்கு சைபீரியாவில் வசிக்கும்படி வெளியேற்றம் - 3...

போட்டி போட்டு வேலை செய்தல்

பல நாட்களுக்குப் பிறகு, பல வாரங்களுக்குப் பிறகு இல்லையில்லை பல மாதங்களுக்குப் பிறகு என்று சொல்லலாம். இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் செப்டம்பர் மாதம் 1ஆம் நாள் முதல் வேலை செய்யத் தொடங்கியது முதல் அந்த வேலைக்கு வெளியே தன்னிச்சையாக, கட்டாயம் இல்லாமல் எழுதுவதும் தட்டச்சு செய்வதும் அரிதாகிப் போயுள்ளது. ஏதாவது விவாதங்கள் தொடங்கி அதற்குப் பதிலளிக்கும் வகையில் அல்லது ஏதாவது அறிக்கை எழுதுவது என்ற வகையில் எழுதியிருக்கிறேன். நீண்ட கால நோக்கில் அல்லது உடனடியாக தேவையான ஆனால் அவசரம் இல்லாத எதையும் எழுதுவது என்பது நின்று போயிருக்கிறது. அப்படிப்பட்ட வரிசையில் சீனாவைப் பற்றி எழுதுவது உள்ளது. இந்திய சமூகம் பற்றிய மார்க்சின் பார்வையையும் அம்பேத்கரின் ஆய்வுகளையும் பற்றி எழுத வேண்டியுள்ளது. இந்திய முதலாளித்துவத்தின் தோற்றம் பற்றி எழுத வேண்டியுள்ளது. மூலதனத்தை காத்து நிற்றல் என்ற கட்டுரையை எழுத வேண்டியுள்ளது. லெனினை வாசித்தல் என்ற கட்டுரையை எழுத வேண்டியுள்ளது. இவ்வளவுதானா? இதற்குமேல் நிறைய தொகுக்க வேண்டிய வேலைகள் உள்ளன. திறந்தநிலை மார்க்சியம் என்ற நூலை மொழிபெயர்ப்பதில்தான் வாழ்வின் இந்தக் காலகட்டம் தொடங்கியது....

அண்ணல் அம்பேத்கரை மறுக்கும் மரபு

 அண்ணல் அம்பேத்கரின் வரலாற்றுப் பாத்திரம் பற்றிதான் கருத்து வேறுபாடு என்று தெளிவாகச் சொன்னதற்கு நன்றி. இந்தியாவின் சமூகப் புறநிலை எதார்த்தத்தை ஆய்வு செய்யாமல் வறட்டுத்தனமான ஏகாதிபத்திய எதிர்ப்பு என்று முன்னெடுக்கும் அரசியல் முகத்தை வெளிப்படுத்தும் மரபு இது. இந்திய மக்கள் மீது இரண்டு பெரும் மலைகள் அழுத்திக் கொண்டிருந்தன (இன்றும் அழுத்திக் கொண்டுள்ளன). இரண்டும் ஒன்றோடொன்று தொடர்புடையவை, ஒன்றைப் பயன்படுத்தி மற்றொன்று சுரண்டலை நடத்துகின்றது. ஒன்று மூலதனத்தின் சுரண்டல், இன்னொன்று சனாதன இந்து மதத்தின் அடக்குமுறையும் சுரண்டலும். பிரிட்டிஷ் காலனியாதிக்கவாதிகள் ஏகாதிபத்திய மூலதனத்தின் நலனை பிரதிநிதித்துவப்படுத்தினார்கள். இந்திய விடுதலைப் போராட்ட இயக்கத்தின் நிலவுடைமையாளர்கள், முதலாளிகளின் தரப்பு (திலகர், காந்தி, மாளவியா, இந்து மகா சபை) சனாதன இந்து மதத்தின் சுரண்டும் தரப்பின் நலனை பிரதிநிதித்துவப்படுத்தியது. சனாதன இந்து மதம் இந்திய மக்களில் நான்கில் ஒரு பகுதியினரை தீண்டப்படாதோர் என்று ஒதுக்கி வைத்து வாழ்வுரிமைகளை மறுத்தது, இந்துக்களில் நான்கில் மூன்று பகுதியினராக உள்ள இதர பிற்படுத்தப்பட்ட சா...

புறநிலை - கருத்து

 (1) திங்கள், புதன், வெள்ளி கிழமைகளில் "நம்பிக்கை" "ஒளி" என்று கருத்துமுதல்வாதம். செவ்வாய், வியாழன், சனி கிழமைகளில் "புறநிலை மட்டுமே, அகநிலையின் பங்களிப்பே இல்லை" என்ற இயக்க மறுப்பியல் இயந்திரகதியான பொருள்முதல்வாதம்.  இப்படி சிந்திப்பது போலத் தெரிகிறது. அதில் வியப்பில்லை. உண்மையில் கருத்துமுதல்வாதமும் இயந்திரகதியான பொருள்முதல்வாதமும் ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள்தான் என்கிறார் மார்க்ஸ் (ஃபாயர்பாஹ் பற்றிய முதல் ஆய்வுரையில், தேர்வுநூல்கள் தொகுதி 1, பக்கம் 7). (2) . "ஃபாயர்பாகின் பொருள்முதல்வாதம் உள்ளிட்டு இதுவரை இருந்து வந்திருக்கும் [இப்போதும் தொடரும்] அனைத்துப் பொருள்முதல்வாதத்தின் குறைபாடு இதுதான்: பொருள் (Gegenstand) எதார்த்தம், புலனுணர்வு என்பது புறப்பொருள் (Object) அல்லது சிந்திப்பு (Anschanung) என்னும் வடிவத்தில் மட்டுமே கருத்தில் கொள்ளப்பட்டிருக்கிறது. ஆனால், மனிதப் புலணுர்வுள்ள நடவடிக்கை என்று நடைமுறை என்றும் கொள்ளப்படவில்லை, அகநிலையாகக் கொள்ளப்படவில்லை. [அகநிலையாக என்பதில் அழுத்தம் சேர்க்கப்பட்டது] எனவே, பொருள்முதல்வாதத்துக்கு நேர் எதிரான நிலைய...